Ad Code

Responsive Advertisement

தீபாவளி அன்று செய்ய கூடாதவை - Astrology

 



தீபாவளி அன்று என்ன செய்யக்கூடாது.? (What Should You Not do on Diwali in Tamil) என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். 


தீபாவளி என்ற வார்த்தையை கேட்டாலே அனைவரது மனதிலும் வரும் சந்தோசத்திற்கு அளவே இல்லை. புது ஆடைகள், வண்ண மத்தாப்புகள், வெடிகள், இனிப்பு பலகாரங்கள் என கொண்டாட்டத்திற்கு அளவே இருக்காது. 


தீபாவளி அன்று நாம் கடவுளின் அருளை பெறவும், வாழ்வில் இருள் நீங்கி ஒளி வர நாம் சில விஷயங்களை கட்டாயமாக செய்ய வேண்டும். தீபாவளி அன்று என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படியுங்கள்.!


அதேபோல், தீபாவளி அன்று நாம் சில விஷயங்களை செய்ய கூடாது. ஆனால், அது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும். அதாவது, தீபாவளி அன்று செய்ய கூடாத செயல்கள் என்னென்ன என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம்.


தீபாவளி அன்று, காலையில் 8 அல்லது 9 மணிவரை தூங்கிக்கொண்டு இருக்க கூடாது. அதிகாலையிலே எழுந்து எண்ணெய் தேய்த்து, சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும். தீபாவளி அன்று தாமதமாக எழுவது வீட்டில் தரித்திரத்தை கொண்டு வரும்.


  • தேவையற்ற சண்டைகள், பேச்சுவார்த்தைகள் இருக்க கூடாது.
  • பிறரிடம் கோபத்துடன் நடந்துகொள்ள கூடாது.
  • தீய சொற்களை பேசுதல் கூடாது.
  • முக்கியமாக அசைவ உணவுகளை சாப்பிட கூடாது. அசைவ உணவுகளை சமைப்பது, சாப்பிடுவது வீட்டிற்கு பாவங்களை கொண்டு வரும் என்று கூறப்படுகிறது.
  • மேலும், மதுபானங்களை அருந்துதல் கூடாது.
  • தீபாவளி அன்று கத்தி, கத்தரிக்கோல் போன்ற கூர்மையான பொருட்களை வாங்க கூடாது.
  • இரும்பு சம்மந்தப்பட்ட பொருட்களை வாங்குதல் கூடாது. இரும்பு பாத்திரங்கள் போன்றவற்றை வாங்குவதை தவிர்க்க வேண்டும். மேலும், கண்ணாடி சம்மந்தப்பட்ட பொருட்களை வாங்குதல் கூடாது.
  • வீட்டில் சிறு குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானோர், நோய்வாய்ப்பட்டோர் மற்றும் வளர்ப்பு பிராணிகள் (ஆடு, மாடு, நாய், பூனை) இருந்தால் அதிக சத்தத்துடன் இருக்கும் வெடிகளை வெடிக்க கூடாது.


தீபாவளிக்கு புது ஆடைகள் எடுப்பது, பலகாரம் செய்வது, பட்டாசு வாங்குவது என்று பலவகையான விஷயங்களை செய்வோம். அந்த வகையில் இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது என்னவென்றால்.. தீபாவளி அன்று நாம் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத சில விஷயங்களை பற்றி தான் பார்க்க போகிறோம். சரி வாங்க அவற்றை தெரிந்துகொள்ள பதிவை தொடர்ந்து படிப்போம்.


No: 1

நரகாசுரனை கிருஷ்ண பகவான் வாதம் செய்த நாள் தான் தீபாவளி இதன் நாளில் அதிகாலை எழுத்து நீராட வேண்டும், அதிலும் தலைக்கு நல்லெண்ணெய் வைத்து, சிகைக்காய் தேய்த்து தான் குளிக்க வேண்டும். இவற்றில் நாம் செய்ய கூடாத விஷயம் என்னவென்றால் தலைக்கு ஷாம்பு போட்டு குளிக்க கூடாது. இன்றைய ஒரு நாளாவது தலைக்கு நல்லெணெய் வைத்து சிகைக்காய் பயன்படுத்தவும். இதனால் உங்கள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.


தீபாவளி அன்று தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் தீய விஷயங்கள் அனைத்தும் அளித்து, நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என்று ஒரு ஐதீகம்.


No: 2

தீபாவளி அன்று நேரம் கழித்து குளிக்க கூடாது, அதாவது அதிகாலை பிரம்ம முகூர்த்தத்திற்குள் குளிக்க வேண்டும். தீபாவளி அன்றாவது மற்ற நேரங்களில் குளிப்பதை தவிர்த்து விட்டு அதிகாலை குளிக்கவும்.


No: 3

குறிப்பாக தீபாவளி அன்று அனைவருமே குளித்துவிட்டு, புது ஆடைகளை அணிந்து கொண்டு வீட்டில் உள்ள பெரியவர்களிடமாவது ஆசிர்வாதம் பெற வேண்டும். இந்த விஷயத்தை கண்டிப்பாக செய்யாமல் இருக்க கூடாது. பெரியவர்களின் பெரிபுராண ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைத்துவிட்டால் போதும் உங்கள் வாழ்கை சிறப்பாக இருக்கும்.


No: 4

தீபாவளி அன்று கோவிலுக்கு செல்லாமல் இருக்காதீர்கள் அதாவது காலை எழுத்து குளித்துவிட்டு, புது ஆடைகளை அணிந்துவிட்டு கோவிலுக்கு சென்று வாருங்கள். இதன் மூலம் கடவுளின் அருளும், ஆசிர்வாதமும் உங்களுக்கு கிடைக்கும். இதன் மூலம் கடவுளின் ஆசிர்வாதமும் கிடைக்கும்.


No: 5

தீபாவளி அன்று அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். தேவை இல்லாத சண்டை சச்சரவுகள் இன்றைய நாள் செய்ய வேண்டாம். நீங்களும் மகிழ்ச்சியாக இருங்கள் மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்து கொள்ளுங்கள்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement