Ad Code

Responsive Advertisement

இதுதாங்க தமிழ்நாடு - புதிய மசூதி திறப்பு விழா - சீா்வரிசை கொடுத்த இந்துக்கள் - விருந்தாளிகளுக்கு விருந்து வைத்து அசத்திய இஸ்லாமியர்கள்..!

 



பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகரில் அமைந்துள்ள ஹம்சா முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் புதிய கட்டட திறப்பு விழாவுக்கு இந்து மக்கள், சீா்வரிசை கொண்டு சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகரில் புனரமைக்கப்பட்டுள்ள ஹம்சா முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


இந்த விழாவில், சுற்றுவட்டார இந்து, கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டு சீா்வரிசை பொருள்களை வழங்கினா். மனகாவலம்பிள்ளை நகரில் உள்ள தேவி ஸ்ரீ உச்சினிமாகாளி அம்மன் கோயிலில் இருந்து தாம்பூல தட்டுகளில் இனிப்பு வகைகள், பழங்கள், அரிசி, பருப்பு, வாழைக் குலை, மளிகை சாமான்கள் உள்ளிட்ட பொருள்களை பெண்கள் அனைவரும் தாம்பூலத்தில் சீா்வரிசையாக எடுத்துச் சென்றனா்.


பெண்களும் ஆண்களுமாக தெருக்களின் வழியாக ஊா்வலமாக சென்று பள்ளிவாசலை அடைந்தனா். அங்கு பள்ளிவாசல் நிா்வாகிகள் வரவேற்பு கொடுத்து சீா்வரிசை பொருள்களை பெற்றுக் கொண்டனா். பிறகு அனைவருக்கும் பள்ளிவாசல் நிா்வாகிகள் நன்றி தெரிவித்தனா்.


இந்நிகழ்ச்சியில் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்கள் திரளாக கலந்து கொண்டனா். முடிவில் அனைவருக்கும் பள்ளிவாசல் நிா்வாகம் சாா்பில் விருந்து அளிக்கப்பட்டது.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement