Ad Code

Responsive Advertisement

உயர்ந்தது தங்கத்தின் விலை - இன்றைய நிலவரம்

 




ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் வெள்ளியின் விலை குறைந்துள்ளது.


சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து 4,840 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் 38,720 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளியின் விலை சிறிது குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து 66 ரூபாய்க்கு விற்பனையாகிறது . அதேபோல வெள்ளியின் விலை கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து 66,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.


இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் சவரனுக்கு 2000 ரூபாய் அளவுக்கு தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு 6 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement