Ad Code

Responsive Advertisement

வெங்காயம், தக்காளி விலை "கிடுகிடு" உயர்வு

 




வெங்காயம், தக்காளி, உருளைகிழக்கு விலை அதிகரித்து வரும் நிலையில், மற்ற காய்கறிகளின் விலை படிப்படியாக குறைய துவங்கியுள்ளது.


திருவள்ளூர், வேலுார், திண்டுக்கல், நீலகிரி, தேனி, ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், காய்கறி சாகுபடி நடந்து வருகிறது. இவை மாநிலத்தின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு இல்லாததால், அண்டை மாநிலங்களில் இருந்து பலவகை காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன.


மஹாராஷ்டிரா, ஹரியானா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மாநிலங்களில் இருந்து, வெங்காயம், உருளைகிழங்கு விற்பனைக்கு வருகிறது. விளைச்சல் குறைவு காரணமாக, சில மாதங்களாக காய்கறிகளின் விலை உயர்ந்திருந்தது.


தற்போது, அறுவடை துவங்கிய நிலையில், கத்தரிக்காய், வெண்டைக்காய், பீன்ஸ், முள்ளங்கி, அவரைக்காய், முருங்கைக்காய், சவ்சவ், நுாக்கல், பாகற்காய், வெள்ளரி உள்ளிட்ட பலவகை காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. இவை கிலோ, 15 முதல் அதிகபட்சமாக 30 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.


கேரட், பீட்ரூட், சேனைகிழங்கு, கோஸ் உள்ளிட்டவற்றின் விலை குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், வெங்காயம், தக்காளி, உருளை கிழங்கு விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இவை கிலோ, 50 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. இதனால், மார்க்கெட்டிற்கும், கடைகளுக்கும் நுகர்வோர் வருகை குறைந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement