நாய் பாலூட்டி வகையை சேர்ந்த விலங்கு என்பது நாம் அறிவோம். பொதுவாக பாலூட்டிகள் வெப்ப ரத்த பிராணிகள் ஆகும். வெப்ப ரத்த பிராணிகள் தன் உடல் வெப்பநிலையை ஒரே சீராக வைத்துக்கொள்ளக் கூடிய தகவமைப்பை பெற்றவையாகும்.
குறிப்பாக கோடை காலத்தில் சுற்றுப்புறம் அதிக வெப்ப நிலையில் இருக்கும். இந்த வெப்பநிலை நம் உடல் வெப்ப நிலையை விட அதிகமாக இருக்கும். அப்போது நம் உடலில் உள்ள வியர்வை சுரப்பிகள் நன்கு வேலை செய்து வியர்வையினை வெளியேற்றும்.
உடலில் இருந்து வியர்வை வெளியேறுவதால் நம் உடல் வெப்பநிலை அதிகரிக்காமல் பாதுகாக்கப்படுகிறது.
கோடைகாலத்தில் நாய்கள் நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு மூச்சுவாங்க ஓடும். அப்போது நாயின் நக்கிலிருந்து நீர் வடிந்துகொண்டே இருப்பதை நாம் பார்த்திருப்போம். இதற்க்கு முக்கியமான காரணம் நாய்க்கு வியர்வை சுரப்பிகள் உடலின் தோல் பகுதியில் இல்லை. நாய்க்கு பாதத்தில்தான் வியர்வை சுரப்பிகள் உள்ளன அதுவும் குறைவாக.
ஆகையால் உடல் வெப்பத்தை சீராக வைத்துக்கொள்ள நாக்கின் வழியாகவும்,வாய்க்குழியிலிருந்தும் நீர் வெளியேறி -சுவாசப் பாதையை ஈரமாக வைத்துக்கொள்ளும். இதன் காரணமாக நாயின் உடல் வெப்பநிலை சீராக பராமரிக்கப்படுகிரது. இதனால்தான் நாய் நாக்கை வெளியே நீட்டிக்கொண்டு ஓடுகிறது.
சாதாரணமாக நாயானது ஒரு நிமிடத்திற்கு 15 முதல் 30 தடவைசுவாசிக்கும். ஆனால் கோடைகாலங்களில் 300 தடவைக்கு மேல் சுவாசிக்கும்.
0 Comments