ஓரு இளைஞன் தன்னுடைய தந்தையை பார்த்து கேட்டான்… “அப்பா செல்போன், டி வி, கம்ப்யூட்டர், இண்டர்நெட், ஏசி, வாஷிங் மெஷின், கேஸ் கனெக்ஷன், மிக்ஸி, மற்றும் கிரைன்டர் இவைகள் எல்லாம் இல்லாமல் உங்களால் எப்படி அப்பா அந்த காலத்தில் உங்களால் வாழ முடிந்தது?” என்று.
அதற்கு அந்த தந்தை கூறினார்…, “மரியாதை, மானம், மதிப்பு, வெட்கம், உண்மை, நற்குணம், நன்னடத்தை, நேர்மை, தெய்வ பக்தி, தர்மம், ஒழுக்கம்., இவை அனைத்தும் இல்லாமல் நீங்கள் இப்போது எப்படி வாழப் பழகி விட்டீர்களோ மகனே அதுபோலத்தான்” என்று.
ஆம் 1940-1990 க்குள் பிறந்த நாங்கள் உண்மையாகவே வரம் பெற்றவர்கள்… நாங்கள் சைக்கிள் ஒட்டினோம், பள்ளி முடிந்ததும் நண்பர்களுடன் பொழுது சாயும் வரை வெளியில் விளையாடினோம்…, ஆனால் டி வி யின் முன் உட்கார்ந்ததில்லை.
அன்பும் பாசமும் உள்ள உயிர் தோழர்களுடன் விளையாடினோம்…, இண்டெர் நெட்டில் அல்ல. தாகம் எடுக்கும்போது குழாய் தண்ணீர் குடித்தோம், மினரல் வாட்டர் அல்ல.
ஒரு டம்ளர் ஜூஸை மாறி மாறி நான்கு நண்பர்களும் குடிப்போம்…, ஆனால் எந்த ஒரு தொற்று நோயும் எங்களுக்கு வந்ததில்லை.
தினமும் மூன்று வேளை அரிசி சாதம் தின்போம்…, ஆனாலும் எடை கூடியதுமில்லை சர்க்கரை நோய் வந்ததுமில்லை.
எங்கு போனாலும் வெறுங் காலுடன் நடப்போம்…, ஆனால் எந்த ஒரு பாதிப்பும் வந்ததில்லை.
எங்கள் பெற்றோர் எந்த ஒரு ஊட்ட சத்து உணவும் தந்ததில்லை…, ஆனாலும் நாங்கள் ஆரோக்கியமாகவே இருந்தோம்.
எங்கள் பெற்றோர்கள் பணக்காரர்கள் அல்ல…, ஆனாலும் அன்புக்கும் பாசத்துக்கும் எங்களுக்கு பஞ்சம் இல்லை.
பெற்றோர்களோடும் நண்பர்களோடும் படுத்து உறங்கினோம்…, ஹாஸ்டல் அறைகளில் அல்ல.
உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டிற்கு, முன்னறிவிப்பின்றி போவோம்…, வரவேற்பிற்கும், விருந்திற்கும் குறை இருந்ததில்லை.
எங்களின் போட்டோக்கள் எல்லாம் கருப்பு வெள்ளைதான்…, ஆனால் எங்களின் நினைவுகளோ வண்ண மயமானவைகள்.
எங்களின் குடும்பங்கள் எல்லாம் அன்பை கொட்டும் கூட்டுக் குடும்பங்கள்…, உங்களைப்போன்று தனிக்குடித்தனம் அல்ல.
எங்கள் தலைமுறையினர் எல்லோரும் பெற்றோர்களின் கட்டளைக்கு கட்டுப்பட்டு வளர்ந்தோம். பெற்றோர்களும் பிள்ளைகளின் உணர்வுக்கு மிகுந்த மதிப்பளித்தார்கள். சுருக்கமாக சொன்னால், “WE ARE THE LIMITED EDITIONS” ஆகவே எங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்…, அன்பாக இருங்கள், கற்றுக் கொள்ளுங்கள், நாங்கள் இம்மண்ணிலிருந்து மறையும் வரை…!
0 Comments