Ad Code

Responsive Advertisement

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

 




தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பசலனத்தால் தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், குமரி, நெல்லை, தென்காசி ஈரோடு, தேனியில் இன்று கனமழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.


வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மே 27,28,29ம் தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement