பொய் சொல்லுவதில் உள்ள மாபெரும் சள்ளையே இதுதான், அது மேலும் மேலும் புதிய களங்களில் தன்னைத் தொடர்ந்து அங்கீகரிக்கும்படி வந்து நிற்கும்.
படிப்பு என்பது வயிற்றுச் சோற்றுக்கு வழியில்லாதவர்கள் மாதச் சம்பளத்துக்கு வழி தேடிக் கொள்ளும் முயற்சி.
இன்பம் என்றால் என்னவென்றே பலருக்குத் தெரியாது. அது பொன்னால் கிடைப்பதல்ல... புகழால் கிடைப்பதல்ல... தன்னை அறிதலில் ஓர் இன்பம் இருக்கிறது பாருங்கள், அந்த இன்பமே உயர்வானது.
ஆதிக்கம் தான் எதிரியே தவிர, யாருடைய ஆதிக்கம் என்பது பொருட்டல்ல, ஆதிக்கத்தை எதிர்ப்பதன் மூலம் தான் ஜனநாயகத் தன்மை வளரும்.
யாரை எங்க வைக்கணும்னு நாம தான் முடிவு பண்ணணும், எப்பவுமே டாமினேட் பண்றது தான் கெத்து.
நடைமுறை வாழ்க்கையிலிருந்து ஒருவனை விலக்கி ஒருவனின் அறிவை எது மயங்கச் செய்கிறதோ அதுவே போதை. அது கடவுள் பக்தியானால் என்ன, கஞ்சா போதையானால் என்ன?
- ஜெயகாந்தன்.

0 Comments