மருங்காபுரி காட்டில், புத்திசாலி நரி ஒன்று இருந்தது. தனித்து, அடையாளம் தெரிந்தது. எந்த செயலையும் எப்படி செய்ய வேண்டுமோ அப்படி செய்து முடித்து விடும். கூட்டத்தைச் சேர்க்காமல், தனியாகவே முடிக்கும் திறன் கொண்டது.
வேலையில் குறிக்கீடு ஏற்பட்டு, தாமதமாகும் என்பதால் தான் யாரையும் சேர்ப்பதில்லை. ஆனால், கிடைக்கும் உணவை பகிர்ந்து கொடுக்கும். அதனால், எல்லா மிருகங்களிடமும், அதற்கு நல்ல பெயர். அதன் வாழ்க்கை துன்பம் இன்றி, ஆனந்தமாக ஓடிக் கொண்டிருந்தது.
ஒரு நாள் இரவு -
காட்டின் பக்கத்தில், மனிதர்கள் வசிக்கிற ஊர்களைப் பார்த்த வண்ணம் சென்றது. அதன் கண்ணில், மாந்தோப்பு ஒன்று தென்பட்டது. கொத்துக் கொத்தாக, காய்களும், பழங்களும் தொங்கிக் கொண்டிருந்தன. சுற்றிலும், வேலி போடப்பட்டிருந்தது.
அதில், நுழைந்து செல்ல ஒரு வழியைக் கண்டுபிடித்தது. அதன் வழியாக, எந்த வித இடைஞ்சலும் இல்லாமல் சென்று வர முடியும்.
அந்த வழியாக, தோப்பினுள் சென்றது நரி!
நிலவு வெளிச்சம் காய்ந்தது. காவலுக்கு யாருமில்லை. மாம்பழங்கள் உதிர்ந்து கிடந்தன. அவை வெளிச்சத்தில் நன்றாக தெரிந்தன.
ஒன்றை எடுத்து தின்று பார்த்தது; மிகவும் ருசியாக இருந்தது. நல்லப் பழங்களை பொறுக்கி எடுத்தது.
மறுநாள் -
எடுத்து வந்த பழங்களை, மற்ற மிருகங்களுக்கு கொடுத்தது நரி.
மாம்பழத்தை தின்ற முயல், மான், ஒட்டகச்சிவிங்கி எல்லாம் பாராட்டின. கரடியும், ஒரு பழத்தை வாங்கி சாப்பிட்டது. அதன் ருசியில் மயங்கியது.
நரி கொடுத்த பழம் போதவில்லை. என்ன செய்யலாம் என யோசித்தது கரடி.
ஒரு முடிவுடன் காத்திருந்தது.
*நாளை முடியும்*

0 Comments