Ad Code

Responsive Advertisement

திடீரென சளி, தொண்டை வலியா? காரணத்தை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

 



காலையில் எழுந்தால் பனிப்பொழிவு அல்லது இதமான குளிர் இருக்கிறது, ஆனால் மதியம் 12 மணிக்கு வெயில் வாட்டி வதைக்கிறது. இந்த சூழலில் அலுவலகத்திற்கு சென்றால் ஒருவருக்கு தும்மல், இன்னொருவருக்கு தொண்டை வலி, மற்றவர்களுக்கு உடல் சோர்வு எனப் பாதிப் பேர் அவதிப்படுவதை காண முடிகிறது.


"எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?" என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. உண்மையில் இது வானிலை காரணமாக உடலில் ஏற்படும் மாற்றம் தான். கடந்த சில மாதங்களாக குறைந்த சூரிய வெளிச்சம் மற்றும் குளிர்ந்த காற்றிற்கு பழகிப் போன நம் உடல், இப்போது திடீரென அதிகரிக்கும் பகல் நேரத்திற்கும், வெப்பத்திற்கும் ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளப் போராடுகிறது.


இதனால் எந்த நோயும் இல்லாத ஆரோக்கியமான மனிதர்கள் கூட, காரணமே இல்லாமல் மனச்சோர்வாகவோ அல்லது அதிகக் களைப்பாகவோ உணரக் கூடும்.


ஏன் இந்த நேரத்தில் சோர்வு ஏற்படுகிறது? நமது உடல் வெளிச்சம் மற்றும் வெப்பநிலையைப் பொறுத்தே இயங்குகிறது. குளிர்காலத்தில் பகல் நேரம் குறைவாக இருந்ததால், நம் மூளை ஒரு விதமான மந்த நிலைக்குப் பழகியிருக்கும். இப்போது வசந்த காலம் தொடங்கி பகல் பொழுது நீளும் போது, உடல் மீண்டும் சுறுசுறுப்படையக் கூடுதல் ஆற்றலைச் செலவிடுகிறது.


பகல் நேர மாற்றம்: மாலையில் நீண்ட நேரம் வெளிச்சமாக இருப்பதால், நாம் வழக்கத்தை விடத் தாமதமாகத் தூங்கச் செல்கிறோம். ஆனால் காலையில் சூரியன் சீக்கிரம் வந்து விடுவதால் தூக்கம் கலைந்து விடுகிறது. இந்தச் சிறு நேரத் தூக்கமின்மை (Sleep Deficit) நாளுக்கு நாள் சேர்ந்து, நம்மை அறியாமலேயே ஒரு பெரிய சோர்வைத் தருகிறது.


சீரற்ற வானிலை: காலையில் குளிர், மதியம் வெப்பம் என ஒரே நாளில் வானிலை ஊசலாடும் போது, உடல் வெப்ப நிலையைச் சீராக வைத்திருக்க நம் இதயம் மற்றும் நுரையீரல் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. இது ஒரு வகையான 'உடல் ரீதியான மன அழுத்தத்தை' (Physical Stress) உருவாக்குகிறது.


ஏன் அனைவருக்கும் இந்த பாதிப்பு? இப்போது அலுவலகத்தில் அல்லது வீட்டில் பலருக்கும் ஒரே நேரத்தில் சளி, இருமல் வருவதற்கு முக்கியக் காரணம் இந்த வானிலை மாற்றம் வைரஸ்களுக்கு சாதகமாக இருப்பது தான்.


வெப்ப நிலையும் ஈரப்பதமும் மாறி மாறி வரும் போது, இன்ஃப்ளூயன்சா போன்ற வைரஸ்கள் மிக வேகமாகப் பரவுகின்றன. மதிய நேர வெப்பத்தால் காற்றில் ஈரப்பதம் குறையும் போது, நம் மூச்சுக்குழாய் மற்றும் தொண்டையில் உள்ள மெல்லிய சவ்வுகள் வறண்டு போகின்றன. இது கிருமிகள் எளிதாக நம் உடலுக்குள் நுழைய வழி வகுக்கிறது.


உடல் வெப்ப நிலையைச் சீராக்குவதிலேயே அதிக ஆற்றல் செலவாவதால், கிருமிகளை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு மண்டலம் தற்காலிகமாகச் சற்றே பலவீனமடைகிறது.


வைட்டமின் D குறைபாடு: குளிர்காலத்தில் நாம் வீட்டுக்குள்ளேயே அதிக நேரம் செலவிட்டிருப்போம். இதனால் நம் உடலில் 'வைட்டமின் D' அளவு குறைந்திருக்கும். இது தசை வலி, சோர்வு மற்றும் மனநிலை மாற்றங்களுக்கு முக்கியக் காரணமாகிறது. சூரிய ஒளி அதிகமாகக் கிடைக்கும் இந்தச் சூழலில் மெதுவாக நம்மை வெயிலில் ஈடுபடுத்திக் கொள்வது அவசியம்.


இந்தச் சோர்வு பொதுவாக 2 முதல் 4 வாரங்களில் சரியாகிவிடும். ஆனால் பின்வரும் அறிகுறிகள் இருந்தால் நீங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம். விடுமுறை நாட்களிலும் ஒரே நேரத்தில் தூங்கி எழுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.


தாகம் இல்லாவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர் குடிப்பது உடல் வெப்பத்தைச் சீராக வைக்கும். திடீரென கடுமையான உடற்பயிற்சி செய்யாமல், நடைபயிற்சி போன்ற எளிய பயிற்சிகளில் தொடங்குங்கள்.


புரதம் மற்றும் காய்கறிகள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தரும். பருவகால மாற்றம் என்பது இயற்கையானது. உங்கள் உடல் அதற்குப் பழகச் சற்று அவகாசம் கொடுங்கள். முறையான ஓய்வும், சரியான உணவும் உங்களை மீண்டும் புத்துணர்ச்சி பெறச் செய்யும்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement