Ad Code

Responsive Advertisement

மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை!

 



சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இரண்டாவது முறையாக மொத்தம் ரூ. 1,400 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 89,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


சென்னையில் கடந்த திங்கள்கிழமை (செப்.29) முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. செப்.29-இல் சவரன் ரூ.1,040 உயர்ந்து ரூ.86,160-க்கும், செப்.30-இல் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.86,880-க்கும், அக்.1-இல் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.87,600-க்கும், அக்.2-இல் விலை மாற்றமின்றி ரூ.87,600-க்கும் விற்பனையானது.


தொடர்ந்து அக்.3-இல் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.87,200-க்கு விற்பனையான நிலையில், சனிக்கிழமை விலை மீண்டும் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.87,600-க்கு விற்பனையானது.


இதனைத் தொடர்ந்து, வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,060-க்கும் சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.88,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.


இந்த நிலையில், இன்று மாலை வர்த்தகம் நிறைவடையும் தருவாயில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,125-க்கும் சவரனுக்கு ரூ. 520 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 89,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement