Ad Code

Responsive Advertisement

"பொய்மையும் வாய்மையிடத்து" - இன்று ஒரு சிறு கதை

 




புறநகர் பகுதி ஒன்றில் இருந்த வீட்டில் ஒரு முதிய தம்பதியினர் வசித்து வந்தனர். அவர்கள் வீட்டை சுற்றி அடிக்கடி அன்னியர் நடமாட்டம் இருப்பதை கவனித்து இருவரும் தனியாக இருப்பதால் அவர்கள் மிகவும் கவலை கொண்டனர். ஒருநாள் இரவு நேரத்தில் அவர்கள் வீட்டு தோட்டத்தில் திருடர்கள் சிலர் பதுங்கி இருப்பதையும் கண்டனர். உடனடியாக காவல் நிலையத்துக்கு போன் செய்து சந்தேகத்துக்கிடமான நபர்கள் தங்கள் வீட்டு தோட்டத்தில் பதுங்கி இருப்பதாகவும் தங்களது உடைமைகளுக்கும் உயிருக்கும் பாதுகாப்பில்லை எனவும் புகார் அளித்தனர். 


அப்போது காவல் நிலையத்தில் போதிய காவலர்கள் இல்லை என்றும் தங்களால் இப்போது வர முடியாது என்றும் பதிலளித்தனர். 


அதற்குள் விடிந்து விட்டதால் அந்த மர்ம நபர்கள் போய்விட்டனர். ஒரு வாரம் கழித்து மீண்டும் இரவு அதே போல முதிய தம்பதியினர்  வீட்டிற்குள் நுழைவதற்கு தருணம் பார்த்து வீட்டை சுற்றி பதுங்கி இருந்தனர்.


இம்முறை காவல் நிலையத்துக்கு போன் செய்த முதிய தம்பதி ஐயா, இன்றும் அதே திருடர்கள் எங்கள் வீட்டிற்கு வந்தார்கள் ஆனால் நீங்கள் வரவேண்டாம், எங்கள் வீட்டைச் சுற்றி பதுங்கி இருந்த திருடர்களை நாங்கள் கொன்று விட்டோம் என்று கூறி போனை வைத்து விட்டனர்.


அடுத்த ஐந்து நிமிடத்தில் காவலர்கள் பெரும் படையுடன் முதியவர்களின் இல்லத்துக்கு வந்தனர். பதுங்கி இருந்த திருடர்களைக் கைது செய்துவிட்டு ஏன் கொலை செய்ததாக பொய் சொன்னீர்கள் என்று முதிய தம்பதியிடம் கேட்டனர். அதற்கு அவர்கள் நீங்களும் தான் உங்கள் காவல் நிலையத்தில் போதிய காவலர்கள் இல்லை என்று பொய் சொன்னீர்கள் என்று கேட்க என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்தார்கள் காவலர்கள்.


குறள்: 

பொய்மையும் வாய்மை யிடத்து புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின். 


விளக்கம் : 

குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement