பொதுவாக சிலர் ஜீரக தண்ணீர் முதல் வெறும் ஜீரகம் வரை எடுத்து கொள்வது வழக்கம் ,மேலும் சாம்பார் குழம்பு என்று எல்லா உணவிலும் சீரகத்தை சேர்த்து வருவர் .ஆனால் இப்படி ஓவராக சீரகம் எடுத்து கொள்வது நிறைய பக்க விளைவுகளை உண்டாகுமாம் .ஓவரா சீரகம் சாப்பிடுவோரை ஓரம் கட்ட காத்திருக்கும் நோய்கள் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.இப்படி அதிகமாக எடுத்து கொள்வதால் கல்லீரலில் பாதிப்பு உண்டாகுமாம் ,சிலருக்கு சிறுநீரக பாதிப்பு கூட உண்டாகுமாம் .
2.இன்னும் சிலருக்கு அடிக்கடி ஏப்பம் வந்து ஒருவிதமான எரிச்சல் உணர்வுடன் இருப்பார்களாம்அதனால் சீரகத்தை அதிகம் எடுத்து கொள்வது ஆபத்தையே ஏற்படுத்தும்.
3.அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல சீரகத்தையும் அளவாக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
4.கர்ப்பிணி பெண்கள் அதிக அளவு சீரகம் எடுத்தால் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் உண்டாம்
5.மாதவிடாய் நாட்களில் பெண்கள் அதிகம் சீரகம் எடுத்தால் அதிக ரத்தப்போக்கு உண்டாகுமாம்
6.சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருப்போர் லோ சுகர் ஏற்படாமலிருக்க சீரகம் குறைவாக எடுத்து கொள்வது நலம் சேர்க்கும்
0 Comments