Ad Code

Responsive Advertisement

கார்த்திகை தீபம் 2024 - வீட்டில் விளக்கேற்ற நல்ல நேரம்

 




அர்த்தநாரீஸ்வரர் தரிசனம் :

பார்வதி தேவி, கடும் தவம் இருந்து, சிவபெருமானின் உடலில் பாதியை பெற்றதும் இந்த தீபத் திருநாளில் தான். 


இதை கெளரவிக்கும் வகையில் வருடத்திற்கு ஒரே ஒரு முறை வெறும் 3 நிமிடங்கள் மட்டும், ஆனந்தமாக ஆடியபடியே அண்ணாமலையார் அர்த்தநாரீஸ்வரராக வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். அர்த்தநாரீஸ்வரர் வெளியே வந்த வேகத்தில் மீண்டும் உள்ளே சென்று விடுவார். 


அர்த்தநாரீஸ்வரர் காட்சி கொடுத்த அடுத்த நொடி, அண்ணாமலையார் மலை மீது மகாதீபம் ஏற்றப்படும்."அண்ணாமலையாருக்கு அரோகரா" என்ற பக்தர்களின் கோஷம் விண்ணை பிளக்க, மகாதீபம் தரிசனம் நடைபெறும். இந்த காட்சியை நேரில் திருவண்ணாமலை செல்ல முடிந்தவர்கள் நேரிலும், முடியாதவர்கள் டிவியிலும் கண்டு தரிசித்த பிறகு, அண்ணாமலையாருக்கு அரோகரா என மனதார சிவ பெருமானை வேண்டி சொல்லி விட்டு அதற்கு பிறகே நம்முடைய வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும்.


வீட்டில் விளக்கேற்ற நல்ல நேரம் :


கார்த்திகை தீபத்தன்று மாலை 5 மணிக்கு முன்பாகவே விளக்குகளுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து, திரி போட்டு, எண்ணெய் அல்லது நெய் ஊற்றி தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். திருவண்ணாமலை மகாதீபத்தை தரிசித்த பிறகு வீட்டில் மாலை 6 மணிக்கு பிறகு தான் விளக்கேற்ற வேண்டும். 


முதலில் வாசலில் விளக்கு ஏற்றி, மகாலட்சுமியை வீட்டிற்குள் அழைத்து வந்து, பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும். அதற்கு பிறகு வீட்டின் மற்ற பகுதிகளிலும் விளக்கேற்ற வேண்டும். 


ஒரு முறை விளக்கு ஏற்றிய பிறகு அடிக்கடி எண்ணெய் ஊற்றுவது, திரியை தூண்டி விடுவது போன்றவற்றை செய்யக் கூடாது. அந்த விளக்கு எவ்வளவு நேரம் எரிகிறதோ, அவ்வளவு நேரம் எரிய விட்டு, தானாக குளிரும் படி செய்ய வேண்டும். குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை விளக்கு எரிந்தால் கூட போதுமானதாகும்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement