உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் முன்னேறி வருகிறது.நகர்புறங்கள் மட்டுமின்றி கிராமபுறங்களிலும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் சேவைகள் வழங்கப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் காகிததாள் பணப் பரிமாற்றம் மட்டுமே இருந்து வந்த நிலையில் தற்பொழுது காகிதமில்லா அதாவது ஆன்லைன் பணப் பரிமாற்றம் அதிகரித்து விட்டது.டீ கடை முதல் பெரிய வணிக மையங்கள் வரை அனைத்து இடங்களிலும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுகிறது.
அதேபோல் தாற்பொழுது ஊதியம்,பென்ஷன் போன்றவை வங்கி கணக்கிற்கு அனுப்பப்படுவது அதிகரித்த வண்ணம் உள்ளது.இதனால் அனைவரும் வங்கி கணக்கு தொடங்கி ATM மூலம் பணம் எடுத்தல்,பரிவர்த்தனை செய்தல் போன்றவை அதிகம் நடைபெற்று வருகிறது.
ATM-இல் பணம் எடுப்பதற்கு மாற்றாக "ஆதார் ஏடிஎம்கள்" என்ற சேவையை மத்திய அரசு வழங்கி வருகிறது.இந்த ஆதார் ஏடிஎம் மூலம் வீட்டில் இருந்தபடி பணத்தை எளிதில் பெற முடியும்.அதற்கு உங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும்.
இந்த ஆதார் ATM மூலம் தங்கள் வங்கி கணக்கில் இருந்து ரூ.10000 வரை கட்டமின்றி பணம் எடுக்க முடியும்.இதற்கு நீங்கள் நீங்கள் IPPB இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.பிறகு போஸ்ட்மேன் தங்கள் இல்லத்திற்கு வந்து பயோமெட்ரிக் அடையாளங்களை சரிபார்த்த பிறகு பணம் வழங்குவார்.
முதலில் https://ippbonline.com என்ற இணையதளப் பாக்கத்தில் உள்ள Door Step Banking என்ற லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும்.பிறகு அதில் பெயர்,மொபைல் எண்,முகவரி உள்ளிட்ட சுயவிவரங்களை பதிவிட வேண்டும்.
அதன் பிறகு தங்களுக்கு அருகிலுள்ள போஸ்ட் ஆப்ஸின் பெயர் மற்றும் எடுக்க வேண்டிய தொகை குறித்து பதிவிட வேண்டும்.பிறகு உங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் விவரங்களை பதிவிடவும்.பிறகு I AGREE என்பதை கிளிக் செய்ய வேண்டும்.பிறகு உங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதும் நீங்கள் பதிவு செய்த தொகை உங்கள் வீட்டிற்கே வந்து வழங்கப்படும்.
ஆதார் எனப்பில்டு பேமெண்ட் சிஸ்டம் (Aadhaar Enabled Payment System) அல்லது ஏஇபிஎஸ் (AePS):
இந்த சேவை ஆதார் எனப்பில்டு பேமெண்ட் சிஸ்டம் (Aadhaar Enabled Payment System) அல்லது ஏஇபிஎஸ் (AePS) என்ற பெயரின் மூலம் பொதுமக்களுக்காக செயல்படுகிறது. AePS என்பது NPCI என்ற இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) மூலம் உருவாக்கப்பட்ட ஒரு புதிய அமைப்பாகும். இது ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் வங்கிக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யவும், பணம் எடுக்கவும் அனுமதிக்கிறது.
இதுமட்டுமின்றி, வங்கி கணக்கு இருப்பைச் (bank balance status) சரிபார்க்கவும் மற்றும் ஆதாரில் இருந்து ஆதாருக்கு நிதியை மாற்றவும் (Aadhaar to Aadhaar money exchange) உதவுகிறது. பணம் எடுக்கவும் (Cash withdrawl), பணம் டெபாசிட் (Cash deposti) செய்யவும் நீங்கள் வங்கிகோ, அல்லது ஏடிஎம் மையத்திற்கோ (ATM center) அல்லது டெபாசிட் இயந்திரத்தை (Deposit machine) தேடியோ அலையவேண்டிய அவசியமில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய சேவை இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி (India post-payment bank) உடன் இணைந்து செயல்படுகிறது. இந்த சேவையின் மூலம் உங்கள் ஆதார் விபரங்களுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் இருந்து ரொக்கமாக பணத்தை உங்கள் வீடு தேடிய வரவழைக்க முடியும். இந்த பணத்தை உங்கள் ஏரியாவின் போஸ்ட்மேன் உங்கள் வீடு தேடி வந்து ஒப்படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சேவை உங்களுக்கு 6 வகையான வங்கி சேவையை வழங்குகிறது.
குறிப்பாக, ஏடிஎம் மற்றும் வங்கி செல்லாமல் வங்கி தொடர்பான சேவைகளை அணுக அனுமதிக்கிறது. இந்த AePS சேவையை பயன்படுத்த முதலில் உங்கள் வங்கி கணக்குடன் உங்கள் பயோமெட்ரிக் விபரங்கள் மற்றும் ஆதார் விபரங்கள் இணைக்கப்பட வேண்டும். உங்களிடம் ஒன்றிற்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் இருக்கிறது என்றால், அதில் எது உங்கள் பிரைமரி வங்கி கணக்காக செயல்படுகிறதோ. அந்த கணக்கு மட்டுமே AePS சேவைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
AePS சேவை மூலம் நடைபெறும் பணப்பரிமாற்றத்திற்கு (Money transactions) இந்திய ரிசர்வ் வங்கி (RBI) எந்தவித கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சில வங்கிகள் (banks) ஒரு நாளைக்கு ரூ.50,000 வரை மட்டுமே பணபரிமாற்றத்தை வழங்க அனுமதிக்கிறது.
ஆதார் அட்டை வைத்து AePS முறைப்படி எப்படி பணம் எடுப்பது?
- போஸ்ட்மேன்னிடம் இருக்கும் POS மெஷினில் உங்கள் ஆதார் விபரங்களை உள்ளிட்ட வேண்டும்.
- பரிவர்த்தனை வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
- வங்கியின் பெயரைக் குறிப்பிடவும்.
- பரிவர்த்தனையைத் தொடர பரிவர்த்தனை தொகையை உள்ளிடவும்.
- கட்டணத்தை உறுதிப்படுத்த பயோமெட்ரிக் அங்கீகாரத்தை வழங்கவும்.
- பயோமெட்ரிக் என்பது உங்கள் கைரேகை அல்லது கருவிழி ஸ்கேன்னிங் ஆகும்.
- பணத்துடன் பரிவர்த்தனைக்கான ரசீது வழங்கப்படும்.
0 Comments