பாட்டு கேட்டு கொண்டிருந்த முதியவரின் காதிலேயே ப்ளூடூத் ஹெட்ஃபோன் வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக எலக்ட்ரானிக் பொருட்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருவதை நாம் அறிவோம். அந்த வகையில் காளையார்கோவிலைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் வீட்டில் படுத்துக்கொண்டே பாட்டு கேட்டுக் கொண்டு இருத்திருக்கிறார், அப்போது திடீரென காதில் மாட்டியிருந்த ப்ளூடூத் ஹெட் செட் வெடித்து காதுகள் படுகாயமடைந்தன. இவருக்கு தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments