Ad Code

Responsive Advertisement

4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் - மிக கனமழை எச்சரிக்கை

 



தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், 

வங்கக்கடலில் உருவாகும் புயல் வடதமிழ்நாட்டை நோக்கி நகரும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் வரும் 2ம் தேதி புயல் உருவாகும் என்று கணிக்கப்பட்ட நிலையில் 3ம் தேதி புயல் உருவாகிறது. டிசம்பர்.3ம் தேதி உருவாகும் புயல் வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


நவம்பர் 30(இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது. 


அதோடு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 


வங்கக்கடலில் உருவாகும் புயல் தமிழகத்தை நோக்கி நகரும் என்பதால் அடுத்த நான்கு நாள்களுக்கு மழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement