பேருந்தில் செல்லும் போது படிக்கும் பொருளுக்கும் [புத்தகம்,செய்தித்தாள்,தொலைபேசி...etc], கண்லென்சுக்கும் உள்ள தூரம் அடிக்கடி மாறுபடுகிறது. இதனால் தகவமைப்பு நேரம் [Accomodation period] மாறி மாறி அழற்சியையும் தீமையையும் ஏற்படுத்துகிறது.
நாம் படிக்கும் போது வெளிச்சம் ஒரே மாதிரி இருக்க வேண்டும். ஒருவேளை வெளிச்சத்தின் அளவு மாறினால் கண்பாவையின் விட்டமும் மாறவேண்டி இருக்கும். கண்பாவையின் விட்டம் அடிக்கடி மாறினால் தலைவலி உண்டாகிறது.
எனவே பேருந்தில் பயணம் செய்யும் போது படிப்பதையோ, தொலைபேசியை பார்ப்பதையோ தவிர்ப்பது நமக்கு நல்லது.
0 Comments