Ad Code

Responsive Advertisement

வெற்றிலை காம்பு கிள்ளி விட்டு சாப்பிடுகின்றனர் எதனால் ?

 



கருப்பு வெற்றிலைக்கு கம்மாறு வெற்றிலை என்றும் தாமரை இலை போன்று நல்ல மணமாக இருக்கும் வெற்றிலைக்கு கற்பூர வெற்றிலை என்றும் தளிர் வெற்றிலையை சாதாரண வெற்றிலை அல்லது வெள்ளை நிற வெற்றிலை என்றும் அழைக்கின்றனர்.வெற்றிலையின் இலையும் வேரும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இதன் மருத்துவ பயன்களை குறித்து இங்கு பார்க்கலாம்.


சளி, இருமல் குணமாகும்

வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு சூடுபடுத்தி ஒரு துணியில் வைத்து மார்பில் கட்டினால், மூச்சுத்திணறல் மற்றும் இருமல் முற்றிலுமாக விலகும். தேனுடன் வெற்றிலை சாறை கஸ்தூரி அல்லது கோரோசனை சேர்த்து கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு உண்டான சளி, இருமல் போன்றவை குணமாகும்.


ஞாபக சக்தியை அதிகரிக்கும்

வெற்றிலை நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுப்பதால் படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு கொடுத்துவர ஞாபக சக்தியை அதிகரிக்கும். மேலும் இது வயிற்றில் இருக்கும் வாயுவை வெளித்தள்ளும் தன்மை கொண்டது. மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றை பலப்படுத்தி நல்ல ஆரோக்கியத்தை தரும்.


குடல் புண்

வைட்டமின்களுடன், நார்ச்சத்தும் இருப்பதால் சீதள நோய்களை நீக்கி, உடல் இறுக்கம், குடல் புண்களை குணப்படுத்துகிறது.


நச்சுகளை வெளியேற்றும்

உடலுக்கு வெப்பம் தரும் இந்த வெற்றிலையானது, தாய்ப்பால் சுரப்பியாகவும், வாய்நாற்றத்தையும் போக்கும். வெற்றிலையானது நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்றுநோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது. அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை தூண்டுகிறது.


ஈறுகளில் உள்ள வலி சரியாகும்

வெற்றிலையை மெல்லுவதினால், ஈறுகளில் இருக்கின்ற வலி, இரத்த கசிவு ஆகியவற்றை நீக்கி ஆட கூடிய பற்களையும் கெட்டியாக பிடிக்கும் நிலைக்கு ஈறுகளை தயார் செய்கிறது.


ஆண்மை குறைபாடு நீங்கும்

அளவோடு வெற்றிலை சாப்பிட்டுவந்தால், ஆண்மை குறைபாடு நீங்கும். வாய் துர்நாற்றத்தை போக்கும். வெற்றிலை சாற்றுடன் தேவையான அளவு நீர் மற்றும் பால் கலந்து பருகிவந்தால், சிறுநீர் நன்றாக போகும்.


மூளை சம்மந்தமான நோய்கள் விலகும்

வெற்றிலையை சூடுபடுத்தி நெற்றியில் வைத்திருக்க ஈரத்தால் வரும் தலைவலி நீங்கும். மேலும் வெற்றிலை சாறுடன் திப்பிலி, அரிசி கலந்து சமைத்து வடிகட்டி தேனும் கலந்து குடித்து வர மூளை சம்மந்தமான நோய்கள் விலகும்.


காம்பு

வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் மூதேவியும் வசிகின்றனர் என்ற நம்பிக்கையால் வெற்றிலை போடும் போது காம்பை கிள்ளி விட்டு சாப்பிடுகின்றனர்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement